கிருஷ்ணகிரி,அக்.16- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன் கனிக்கோட்டை வட்டம், கெலமங்க லம் ஒன்றியம் இருதுக் கோட்டை அருகில் உள்ளது. கோவகுட்டை கிராமம். இங்கு 35 இருளர் குடும் பங்கள் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அரசு நிதியில் 20 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.அந்த வீடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிதிலமடைந்துள்ளது. தற்போது பழைய தொகுப்பு வீடுகளில் ஒன்று கூட குடியிருக்கும் நிலையில் இல்லை. பல வீடுகள் கான்கிரீட் மேல் கூரைகள் இடிந்து விழுந்துள்ளது, பல வீடுகளின் முன்புற,பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் இடிந்த தொகுப்பு வீடுகள் அருகிலேயே சிறிய ஓட்டு,சீட்டு வீடு மாதிரி அமைத்து அதில் வாழ்ந்து வருகின்றனர். ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் கூட உள்ளனர்.சுமார் 85 பேர் வசிக்கும் இங்கு மின்சார, கழிப்பறை வசதிகள் எதுவும் இல்லை. திறந்த வெளியில் பயன் படுத்தி வருகின்றனர்.பழைய ஓட்டு வீடுகள் குறுக்கே போடப்பட்ட சட்டங்கள் ஓடுகள் விழுந்து ஓட்டை யான நிலையில் கோணி மற்றும் பாலித்தீன் பேப்பர்களையும் வைத்து அடைத்துள்ளனர். அதுவும் வேக மாக காற்று அடித்தால் மழை பெய்தால் ஓட்டையாகி இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசால் இருளர் மக்களுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 5500 கோடி நிதியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத்துறையின் சம்பந்தப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக தெரிய வருகிறது. இந்நிலையில் கோவகுட்டை இருளர் மக்களை மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், கெலமங்கலம் ஒன்றிய செய லாளர் ராசா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், நேரில் சென்று பார்த்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் கூறுகையில், “முற்றிலும் சேத மடைந்த வீடுகள் அனைத்தையும் இடித்துவிட்டு புதிய தொகுப்பு வீடு கள் கட்டிக் கொடுக்க வேண்டும்” என்று என ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தார்.