சென்னை பல்கலைக்கழக இதழியல் மக்கள் தொடர்பியல் துறை மற்றும் சென்னை இந்திய ஒலி, ஒளிபரப்பாளர் மன்றம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் முனைவர் வெ.நல்லதம்பி எழுதியுள்ள ‘ஒலியலை ஓவியர்கள்’ என்ற நூலினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதனன்று (செப்.18) வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க தூதரக உதவி தூதர் ஜீன் பிரகன்டி, பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை, முன்னாள் துணை வேந்தர் தங்கராசு, இதழியல் துறை தலைவர் டி.ஆர்.கோபாலகிருஷ்ணன் (பொறுப்பு) சென்னை வானொலி நிலைய இயக்குநர் கமலநாதன், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் ந.அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.