பர்மா, இலங்கையிலிருந்து திரும்பிய தமிழர்களுக்கு பயனளிக்காத வகையில் செயல்படும் ரெப்கோ வீட்டுக்கடன் நிறுவன இயக்குநர் குழுவை கலைக்க வேண்டும், தனியார்மயமாவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (செப்.16) கிண்டியில் உள்ள வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரெப்கோ மீட்பு குழுவின் தலைவர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நிறுவிய இயக்குநர் டி.இ.திருவேங்கடம், பொதுச் செயலாளர் பொன்.தனபால், ரெப்கோ முன்னாள் இயக்குநர் எம்.ஆர்.லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.