சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த உடனடியாக சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை உறுப்பினர் முன்னணி சார்பில் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் பி.காத்தவராயன் தலைமையில் குடியாத்தம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது. இதில் முன்னணி மாவட்டத் துணை தலைவர் செ.ஏகலைவன், விச மாவட்டத் தலைவர் கே.சாமிநாதன், விதொச மாவட்ட தலைவர் பி.குணசேகரன், சிபிஎம் குடியாத்தம் வடக்கு, தெற்கு தாலுக்கா செயலாளர்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், இரா.அன்பரசன் (திராவிடர் கழகம்), இரா.சிவக்குமார்(திராவிடர் விடுதலை கழகம்), இராசி.தலித்குமார்(இந்திய குடியரசு கட்சி), கே.குமரேசன் (விசிக) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.