districts

img

கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர், அக்.2- கடலூர் மாவட்டத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த கோரி சிஐடியு கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழி லாளர் சங்கத்தின் சார்பாக 3 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கைத்தறி ரகத்தை சட்டவிரோதமாக உற்பத்தி செய்யும் விசைத்தறிகளின் மின்சார சலுகையை ரத்து செய்ய வேண்டும்,  ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ. 5 நிவாரணம் வழங்க வேண்டும், நெச வாளர்களுக்கு நெய்தல் கூலியில்  2 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும். நெசவாளர் சட்டத்தை அமல்படுத்த  வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.5000 ஆக உயர்த்த  வேண்டும், கைத்தறி துணி களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்க  வேண்டும், கைத்தறி தனி நலவாரியம் அமைக்க தொழிற்சங்க குழுவை அமைக்க  வேண்டும். நகர்புறங்களில் கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடு கட்டும் திட்டத்தில் விரிவாக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சான்றோர்பாளையம், நடுவீரப்பட்டு, புதுப்பேட்டை ஆகிய இடங்களில் நடை பெற்ற  ஆர்ப்பாட்டங்களில் சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், கைத்தறி சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். தட்சிணாமூர்த்தி, மாவட்டத் தலைவர் ஆர். கல்யாணசுந்தரம், மாவட்டப் பொரு ளாளர் பொருளாளர் இ.தயாளன், சிஐடியு மாவட்ட இணை செயலாளர் ஜே.ராஜேஷ் கண்ணன், துணைத் தலை வர் ஆர்.ஆளவந்தார், கைத்தறி சக நிர்வாகி கள் கந்தசாமி, முருகேசன் குமார் ராஜேந்திரன், பஞ்சநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.