ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை கண்டித்து சிதம்பரம் சாசுக்கடை தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு பங்கேற்று உரையாற்றினார். நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயசித்ரா, நகர் மன்ற உறுப்பினர் தஸ்லீமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.