திருவள்ளூர், ஏப்.23- கிராமப்புறங்களில் மனு கொடுத்து காத்திருக்கும் விவசாய தொழிலாளர்க ளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பேரவை ஞாயிறன்று (ஏப் .23) கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.தவமணி தலைமை தாங்கினார்.இதில் மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங் கம் மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், மாவட்டப் பொருளாளர் என்.கங்காதரன், மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் டி.கோபாலகிருஷ்ணன், பாஸ்கர், மீஞ்சூர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் நூறு நாள் திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், பேரூராட்சி, நகராட்சிக ளில், நகர்ப்புற நூறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கடந்த ஆண்டு சம்பள பாக்கியை வழங்க வேண்டும், மனு கொடுத்து காத்திருக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.