சென்னை, அக். 25 - உயரம் வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து, அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அக்.25ந் தேதியை, உயரம் வளர்ச்சி தடைபட்டோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவை சந்தித்து, உயரம் வளர்ச்சி தடைபட்டோர் மனு அளித்தனர். வளர்ச்சி தடைபட்டோருக்கு சிறப்பு வசதிகளுடன் கூடிய இலவச வீடு களை அரசு வழங்க வேண்டும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், அரசுப் பேருந்துகளில் தாழ்வான படி கட்டுகளில் அமைத்து, இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும், மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு தங்கும் விடுதிகளை உருவாக்க வேண்டும், கல்வி - வேலைவாய்ப்பில் சிறப்பு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும், உயர்கல்வி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர் களுக்கு 40 வயதிற்குள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினர். இந்நிகழ்வின் போது தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.ராணி, எஸ்.ஜெயச்சந்திரன் (வடசென்னை), எஸ்.மனோன்மணி, மனோகர் (மத்தியசென்னை), எம்.குமார் (தென்சென்னை) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.