கிருஷ்ணகிரி, டிச.25- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், உத்தரப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஊராட்சிமன்றங்கள், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் உள்ளிட்ட சில பகுதிகளில் தொழிற் பூங்கா (சிப்காட்) அமைப்பதற்கு 3034 ஏக்கருக்கும் அதிகமாக நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு அரசு வெளியிட்டது. அதன் தொடர் நடவடிக்கையாக, தென்பெண்ணை ஆற்று நீர் பாசனத்தால் விவ சாயம் செழித்தோங்கும் நிலப்பகுதி விவசாயி களை பயமுறுத்தியும், அனுமதியின்றியும் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் மாவட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கும் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துணையுடன், தொடர்ந்து போராடி வருகின்றனர். அடுத்த கட்டமாக, டிசம்பர் 26 அன்று காத்தி ருப்பு போராட்டத்தை அறிவித்தனர். இதனை யடுத்து, சூளகிரி வட்டாட்சியர் அமைதிப் பேச்சுக்கு அழைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ், பொருளாளர் எம்.எம்.ராஜூ, மாநில துணைச் செயலாளர் பி.பெருமாள், வட்டச் செய லாளர் முனியப்பா, முன்னாள் ஊராட்சி கர்ணம் மாரப்பா, நிற்குணா,சீனிவாசலு சரஸ்வதி, சூளகிரி வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
நிலத்தை கையகப்படுத்த விவசாயிகளும், சங்கமும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் காத்திருப்பு போராட் டத்தை கைவிட வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர். இதற்கு விவசாயிகளும், சங்கத் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தற்போது தொழிற்பூங்கா அமைக்க உள்ள தென்பெண்ணை ஆற்றின் ஓரத்தில் 25 கிராமங் கள், 5,000 குடியிருப்புகள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 10 பள்ளிக் கூடங்கள், ஏற்று மதிக்கான பூக்கள்-காய்கறிகள் விளைவிக்கும் 100க்கும் மேற்பட்ட பசுமை குடில்கள், 6 ஏரிகள் உள்ளன. மேலும் வளமான விவசாய நிலத்தில் 10,000 தென்னை மரங்கள், 500க்கும் மேற்பட்ட கிணறு, 1500 ஆழ்துளை கிணறுகள், அதற்கான இலவச மின் இணைப்புகள் இருக் கின்றன. இவைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்து மக்கள் வாழ்வா தாரத்தை பறிப்பதற்கு அரசு அதிகாரிகள் திட்ட மிட்டு செயல்பட்டு வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே, ஓசூரில் சிப்காட் 1, 2, 3 சூளகிரி, போலுப்பள்ளி, போச்சம்பள்ளியில் சிப்காட் அமைப்பதற்கு விவ சாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கிய நிலத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக 3000 ஏக்கருக்கு மேல் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டங்க ளுக்கு இடையில் பேவநத்தம் பகுதியில் 3000 ஏக்கருக்கு மேல் அரசு புறம் போக்கு நிலம் உள்ளது. இதுபோன்ற நிலங்களை பயன்படுத்தாமல் வளமான, சிறு-குறு விவ சாயிகளின் நிலங்களை கார்ப்ப ரேட்களுக்காக கையகப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சமீபத்தில் கோவை மாவட்டத்தில் அன்னூர், ஈரோடு பகுதிகளில் விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக சிப்காட்டிற்கு விவ சாயிகளின் நிலங்களை எடுப்பதை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இனி வளமான விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு கையகப்படுத்த மாட்டோம் என தமிழக அரசும் அறிவித்துள்ளது. ஆனாலும், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் திரும்பத் திரும்ப கார்ப்பரேட்டுகளுக்கு விளைச்சல் நிலத்தை கையகப்படுத்தி கொடுப்பதில் அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள். லாபத்தையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் மாதச் ஊதியம் ரூபாய் 5000, 8000 த்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலத் தொழி லாளர்களை ஒப்பந்த முறையில் பணியில் சேர்த்துக் கொண்டு தொழில் வளம் பெருகும் என்று அதிகாரிகள் கூறுவது முற்றிலும் தவறான வாதமாகும். இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நிலம் எடுப்புக்கு எதிராக கிராம சபை கூட்டங்களிலும் தொடர்ந்து தீர்மானங்கள் நிறை வேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர். எனவே, சூளகிரி, தேன்கனிக் கோட்டை வட்டம், உத்தரப்பள்ளி, கெலமங்க லத்தில் விவசாயிகளின் அனுமதியின்றி நிலத்தையும் எடுப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. திட்ட மிட்டப்படி காத்திருப்பு போராட்டத்தை நடத்து வோம். மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விவசாயி கள் நியாயமன கோரிக்கையை அரசின் கவ னத்துக்கொண்டு சென்று மாற்று ஏற்பாடுகளை செய்யும் வரைக்கும் காத்திருப்போராட்டம் தொடரும். இவ்வாறு தெரிவித்தனர்.