districts

மழைநீர் வடிகால் பாதை அமைக்க தனியார் நிலங்களை கையகப்படுத்த முடிவு

சென்னை, ஜூன் 6-

      மழைவெள்ளத்தின் போது தண்ணீர் வெளியேறுவதற்கு தேவை யான தனியார் நிலத்தை கையகப் படுத்த ஒருங்கிணைந்த வெள்ளத் தடுப்பு முகமை திட்டம் உரு வாக்கப்பட்டு வருகிறது.

     சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் 4,850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வெள்ளநீர் வடிகால் அமைப்பை உருவாக்குவதற்காக ஏராளமான தனியார் நிலங்களை அவர்களுக்கு பாதிப்பின்றி அரசு கையகப்படுத்தி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். புறநகர் பகுதிகளில் உள்ள தனி யார் நிலங்கள் இயற்கையாக மழை நீர் செல்லும் பகுதியாக இருந்தால் வடிகால் வசதிக்காக அந்த நிலத்தின் ஒரு பகுதியை அரசு கையகப்படுத்தி வடிகால் வசதியை உருவாக்கி கொடுக்கும். இதற்காக நில உரிமை யாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும், மாஸ்டர் பிளான் திட்டத்தில் பல்வேறு விதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பேரிடர் நிர்வாக ஆணையரக அதிகாரி கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இயற்கையாக வடிகால் பகுதியாக இருக்கும் நிலத்தை பாதுகாக்க புதிய மாற்று வழிகள் செயல்படுத்தப்படும். இதற்காக கூவம் அடையாறு, கொசஸ்தலையாறு, கோவளம் ஆகிய பகுதிகளில் நீர் நிலைகள் தடை படாத வகையிலும் வடிகால் வசதி கள் அதில் இணையும் வகையிலும் திட்டம் அமைக்கப்படும். வெள்ளப் பாதிப்பு வராத வகையில் வடிகால் வசதியை திறம்பட செய்து கொடுப்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கோட்டூர்புரம், ஜாபர்கான் பேட்டை பகுதிகளில் மழை காலங்களில் தேங்கும் நீரால் பாதிப்பு அதிகமாகிறது. இதை சரி செய்ய 3-வது மாஸ்டர் பிளானில் விரிவாக செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வெள்ள தடுப்பு முழுமை திட்டத்துக்கான ஆலோசனை கூட்டம் செவ்வாயன்று எழிலகத்தில் நடைபெற்றது.