எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சீன கப்பலில் மாலுமி சடலமாக மீட்பு
திருவள்ளூர், ஏப்.24-. சீன கப்பல் ஒன்று 22 மாலுமிகளுடன் இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றி கொண்டு அண்மையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது. சீன கப்பலில் வந்த கோங்-யுவு (57) என்ற மாலுமி கப்பலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 6ஆம் தேதி இந்தோனேசியா துறைமுகத்தில் கப்பல், இருந்த போதே காணவில்லை என இந்தோனேசியா துறை முகத்தில் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது சடல மாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட புகாரின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாலுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதா, உடல்நல குறைவால் உயிரிழந்தாரா, என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலித் மக்களுக்கு தனி ரேசன் கடை, வாக்குச்சாவடி கேட்டு ஆட்சியரிடம் மனு
விழுப்புரம், ஏப்.24- விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம்,டி.தேவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொது மக்கள் தலித் மக்களுக்கு தனி ரேசன் கடை, வாக்குச்சாவடி கேட்டு செவ்வாயன்று (ஏப்.23) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவின் விவரம் வருமாறு, எங்கள் கிராமத்தில் தலித் அல்லாத குடியிருப்பு பகுதியில் 1,500 குடும்பத்தினரும், தலித் பகுதியில் 300 குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். மாதந்தோறும் நாங்கள் ரேசன் கடைக்கு செல்லும்போது ஊர் பகுதி குடியிருப்பில் உள்ள சில சாதி ஆதிக்கமனநிலை கொண்டவர்கள் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, சாதி பெயரை சொல்லி திட்டு வது வழக்கமாக கொண்டுள்ளனர். இரு தரப்பினரும் ஒரே வரிசையில் நிற்கும் போது தீண்டாமை பார்க்கிறார்கள். மேலும் நாங்கள் செருப்பு அணிந்துகொண்டு அங்கு வரக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளது. இந்த சூழலில் கடந்த 19-ந்தேதி மக்களவைத் தேர்தலின்போது நாங்கள் வாக்களிக்க ஆதிக்கசாதியினர் பகுதியில் இருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு செருப்பு அணிந்துகொண்டு சென்று வாக்குப்பதிவு செய்ததால் எங்கள் குடி யிருப்பு பகுதிக்குள் நுழைந்து எங்கள் மீது தாக்கு நடத்தினர். இதுப்பற்றி அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பல ஆண்டு களாக நாங்கள் அனுபவித்து வரும் கொடு மைகளாகும். எனவே எங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் தனி ரேசன் கடை மற்றும் தனி வாக்குச்சாவடி அமைத்துத் தர வேண்டும். அதுமட்டுமின்றி தலித்மக்கள் பயன்படுத்திவரும் பாதையில் ஆக்கிர மிப்புகளை அகற்றித்தருமாறும் கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற அதிகாரி கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
கடனை திருப்பிக்கேட்டவரை பீர் பாட்டிலில் குத்திய வாலிபர் கைது
விழுப்புரம் ,ஏப்.24- விழுப்புரம் அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே உள்ள வி.புதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 45). இவரும் திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணப் பாக்கத்தை சேர்ந்த கோபி (33) என்பவரும் ஒன்றாக கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதில் இருவரும் நண்பர்களாக இருந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோபி, காசி நாதனிடம் இருந்து ரூ.500 கடன் வாங்கியுள்ளார். ஆனால் இதுவரை அந்த கடனை திருப்பித்தரவில்லை. இந்நிலை யில் காசிநாதன் கோபியிடம் சென்று தான் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கோபி, பீர் பாட்டிலை எடுத்து காசி நாதனின் முன்பக்க தலை, முதுகு ஆகிய இடங்களில் குத்தி னார். இதில் காயமடைந்த காசிநாதன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காசிநாதன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோபி மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக் குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விவசாயிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவுரை
ராணிப்பேட்டை, ஏப். 24 - கோடைக் காலத்தில் சிக்கனமாக நீரை பயன்படுத்தி முழுமையான மகசூல், நிறைவான வருமானம் பயிர் சாகுபடி செய்திட மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். கோடையில் நெல் பயிர் செய்வதை விட குறைவான நீர் பயன்படுத்தும் நெல்லுக்கு மாற்று பயிர் கம்பு, மக்காச்சோளம், ராகி, எள் வகை பயிர்களில் பச்சை பயறு, உளுந்து, காராமணி மற்றும் குறுகிய கால தோட்டக்கலை பயிர்களை பயிர் செய்வதன் மூலம் குறைவான நீரில் நிறைவான மகசூல் மற்றும் வருமானம் விவசாயிகள் பெறலாம். மேலும், நிலத்தடி நீர் வீணாவதை தடுத்திடலாம். சிறு குறு விவசாயிகள் நுண்ணீர் பாசனம் கருவிகள் தெளிப்பு நீர், மழைத்தூவான், மற்றும் சொட்டு நீர் பாசன கருவி களை பயன்படுத்தி நிறைவான வருமானம் தரும் மக்காச் சோளம், கம்பு, சோளம், எள், ராகி, பச்சை பயறு, உளுந்து, காராமணி, குறுகிய கால தோட்டக்கலை பயிர்களை கோடை காலத்தில் சிக்கனமாக நீரை பயன்படுத்தி பயிர் செய்திட மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.
கிரிவலம் தி.மலையில் போக்குவரத்து நெரிசல்
திருவண்ணாமலை,ஏப்.24- திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்க ளிலிருந்தும் சுமார் 30 லட்ச த்திற்கும் மேற்பட்ட மக்கள் கிரிவலம் சென்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் சிரம மின்றி கிரிவலம் செல்வ தற்கு, அடிப்படை வசதி கள், போக்குவரத்து வசதி கள், மருத்துவ மற்றும் பாது காப்பு வசதிகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஏப்.24 அன்று காலை 6 மணி முதல், 8 மணி வரை பல்லா யிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. கடும் நெரிசல் ஏற்பட்டது. ரயில் நிலை யத்தில் இயக்கப்பட்ட சில ரயில்களில் ஏராளமான மக்கள் முண்டியடித்து பயணம் செய்தனர்.