districts

img

திருநங்கைகளுக்கான நாட்டிய பள்ளி

சென்னை, மே 31- திருநங்கைகளுக்கான இலவச  பரதநாட்டியப் பள்ளி துவக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் செவ்வா யன்று (மே 31) நடை பெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா  பரத நாட்டியப் பள்ளியை  துவக்கி வைத்து பேசு கையில், திருநங்கைகள் இன்று பல்வேறு துறைக ளில் முத்திரை பதித்து வரு கிறார்கள். இதுபோன்ற பரதநாட்டிய பள்ளிகளை அதிகளவில் திறக்க வேண்டும் என்றார். இந்த பள்ளியை கேரளாவைச் சேர்ந்த சத்ய  சாய் சாரிடபுள் அறக் கட்டளை நடத்துகிறது. ஆர்வமுள்ள திருநங்கை யரை கண்டறிந்து பரதம் கற்கச் செய்யும் பணியை சகோதரன் அமைப்பு மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில்  ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை இயக்குநர் கே.என்.ஆனந்த்குமார், பீனா உண்ணி கிருஷ்ணன், விவேக் ஆர்.நாயர், நெடுங்காடி ஆயுர்வேத மையத்தின் நிறுவனர் நெடுங்காடி ஹரிதாஸ், சுனில் சி.மேனன் (சகோதரன் அமைப்பு), கோபிகா வர்மா, காயத்ரி சுப்பிரமணியன் (சத்யசாய் நடனப்பள்ளி), கலைமாமணி சுதா. திருநங்கை ஜெயா, மயிலை பாலு ஆகியோரும் பேசினர்.