districts

img

சிதம்பரம் அருகே சிலிண்டர் வெடித்து பொருட்கள் சேதம்

சிதம்பரம்,ஜன. 2- சிதம்பரம் அருகே பாலூத்தங்கரை கிராமம் மாரி யம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் தமிழ் இலக்கியா (35). இவர் தனது வீட்டில் சமைப்பதற்கு அடுப்பை பற்ற வைத்து விட்டு, பின்பக்கம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, சமையல் பாத்தி ரங்கள் எரிந்து நாசமானது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.