கடலூர்,டிச.28- பழங்குடியின மக்கள் அனை வருக்கும் கால தாமதமின்றி சாதி சான்று வழங்க வேண்டும் என்று பழங்குடி மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தா சலத்தில் நடைபெற்ற பழங்குடி மக்கள் சங்கத்தின் கோரிக்கை மாநாட்டிற்கு அமைப்பாளர் சி.ரஞ்சிதா தலைமை தாங்கினார். மூத்த வழக்கறி ஞர் ஏ. சந்திரசேகரன் வரவேற்றார். ஆர். அமர்நாத், எஸ்.ராஜா, பி.தேன் மொழி, பி.அன்பழகன், ஏ.விஜய், ஆழ்வார், பி.வெங்கடேசன், ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மனிதம் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு துவக்கி வைத்தார்.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு நிறைவு செய்து உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட அமைப்பாளர் என்.எஸ். அசோகன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.கே. சரவணன் ஆகியோர் பேசினார்கள். கே.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காலி பணியிடங்க ளுக்கு விண்ணப்பம் வராமல் இருக்க காரணம் அவர்களது கல்வி தகுதி தான், பழங்குடி மக்களுக்கு சிறப்பு திட்டங்கள் வகுத்து கொடுக்க வேண்டும். வீட்டுமனை, பட்டா, வீடு கட்ட உதவி, குடும்ப அட்டை அனை வருக்கும் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் அட்டை வழங்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக அவர்களுக்கு சென்று சேர வேண்டும். பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் பொது போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். பழங்குடி மக்கள் மீது சந்தேகப்படுவது, காவல் நிலையத்தில் சித்திரவதை செய்வதையும் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் கடலூர் மாவட்டத் தலைவராக ஆழ்வார், செயலாளராக ரஞ்சிதா, பொருளாளராக வெங்கடேசன், துணைத் தலைவர்களாக வேலு, இளவரசி, மாயவன், துணை செயலாளர்களாக லட்சு மணன், ராஜ்குமார், ரவி ஆகி யோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
நிஜ கதாநாயகர்கள்
கவுரவிப்பு ஜெய்பீம் படத்தின் நிஜ கதா நாயகர்களான ராஜா கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள், அந்த சம்பவத்தை வெளி உலகிற்கு எடுத்து வந்து தொடர் போராட்டம் நடத்திய தோழர் கோவிந்தன், அன்றைய சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ராஜ்மோகன், வழக்கறிஞர் ஏ. சந்திரசேகர் ஆகியோருக்கு இம் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டனர்.