districts

img

சுழற்சி முறை வகுப்புகளால் தரமணி பள்ளி மாணவர்கள் பாதிப்பு அரசு கட்டிடங்களை தற்காலிகமாக பயன்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 10 -

      தரமணி பள்ளி மாணவர்களுக்கு அருகாமையில் உள்ள அரசு கட்டிடங்களை பயன்படுத்தி முழு நேர வகுப்புகளை நடத்த வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

     வேளச்சேரி தொகுதி, தரமணி கோவில் தெருவில் சென்னை தொடக்கப் பள்ளியும், பாரதியார் தெருவில் சென்னை மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. தொடக்கப் பள்ளியில் சுமார் ஆயிரம்  மாணவர்களும், மேல்நிலைப் பள்ளி யில் சுமார் 1600 மாணவர்களும் பயில்கின்றனர்.

    இந்தப் பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாண வர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் இவ்விரு பள்ளிகளுக்கும் கூடுதல் வகுப்பறை கள் கட்ட மாநகராட்சி திட்டமிட்டது. தொடக்கப் பள்ளி வளாகத்தில் சுமார்  3 கோடி ரூபாய் செலவில் தரைத்தளம்  மற்றும் 3 தளத்துடன் புதிய கட்டிடம்  கட்டப்படுகிறது. இதில் 29 வகுப்பறை கள் அமைய உள்ளன.

    மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளத்துடன் கூடிய கட்டிடத்தில் கூடுதலாக 9 வகுப்பறைகள் கட்டப்படுகிறது. தொடக்கப் பள்ளி வளாகத்தில் கட்டப்படும் 29 வகுப்பறைகளில் 12  வகுப்பறைகள் வரை மேல்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த இரு பள்ளிகளின் கட்டுமான பணிகளையும் பிடிஎம் என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது.

    தொடக்கப்பள்ளி கட்டுமான பணி  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பூச்சு வேலைகள், டைல்ஸ் ஒட்டுதல்,  ஜன்னல், கதவு வைத்தல், கழிப்பிடம்  கட்டுதல் போன்ற பணிகளை செய்ய  வேண்டி உள்ளது. ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி பணத்தை வழங்கி னால், தொய்வின்றி ஆகஸ்ட் மாதத் திற்குள் பணிகளை முடிக்க முடியும் என்று அங்குள்ள பணியாளர்கள் கூறுகின்றனர்.  

     மேல்நிலைப் பள்ளியில் கட்டு மானப் பணி தொடங்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. தற்போதுதான் தரை தளத்திற்கான கட்டுமான பணி  தொடங்கியுள்ளது. கட்டுமான வரை படம் 5 முறை மாற்றப்பட்டதால் பணி யில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகள் நிறை வடையும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

   கட்டுமானப் பணியினால் மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத் தப்படுகின்றன. இதன் காரணமாக நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதிய  மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. எனவே, பள்ளியின்  கட்டுமானப் பணியை விரைந்து  முடிக்க வேண்டும். அதுவரையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்க ளுக்கு தற்காலிகமாக மாற்று இடத் தில் முழு நேர வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களுக்கும் எதிர்பார்க் கின்றனர்.

    இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனை, வேளச் சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ. எம்.எச்.ஹசன்மௌலானா, பாலர் பூங்கா தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வனஜ குமாரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வேளச்சேரி பகுதிச் செயலாளர் பி.சித்திரை செல்வி உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர்.

    இதன்பேரில் மாநகராட்சி அதி காரிகள் அண்மையில் பள்ளியை யும், மாற்று இடங்களையும் ஆய்வு  செய்தனர். இருப்பினும், எந்தவித முடிவும் எடுக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன் அந்தப் பள்ளிகளை பார்வையிட்டார். அதன்பின் பேசிய  அவர், “பள்ளிகள் அடுத்தடுத்து திறக்கப்பட உள்ளது.  மாணவர்க ளின் கற்றல் சூழலை பாதிக்காத வகையில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

   பொதுத்தேர்வு எழுதும் மாண வர்களுக்கு முழுநேரம் முறையாக வகுப்புகளை நடத்த, ஐஆர்டி வளாகத்தில் உள்ள பழைய வட்டாட் சியர் அலுவலகம், செம்மொழி நிறுவனம் செயல்பட்ட கட்டிடம் ஆகியவற்றை பயன்படுத்த முன்வர  வேண்டும் என்றார்.