சென்னை, மே 21 - நடேசன் நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை 100 படுக்கை கொண்ட மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. 127வது வட்டம், கோயம்பேடு அருகே நடேசன் நகர் 5வது தெரு வில் நகர்புற ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தில் தினசரி நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெறு கின்றனர். கோயம்பேடு சந்தைக்கு மிக அருகில் உள்ளதால், ஏராளமான தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த மையத்தின் செயல்பாடு பொதுமக்களுக்கு ஏற்றதாக இல்லை. நூற்றுக்கணக்கான நோயாளிகள் வரும் இந்த மையத்தில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். அவ ரும் மதியம் வரை மட்டுமே சிகிக்சை அளிக்கிறார். இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. சுகாதார மையத்தில் ஒரே ஒரு செவிலியர் மட்டுமே இருப்பதால் நோயாளிகள் தரமான மருத்துவ சேவையை பெற முடியவில்லை. ஸ்கேன், எக்ஸ்ரே கருவிகள் இந்த மையத்தில் இருந்தாலும், அவற்றை கையாள்வதற்கான ஊழியர்கள் இல்லை. எனவே, நோயாளிகள் தனியாரிடம் ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்து வருகின்றனர். அவற்றை ஆய்ந்து வாரம் ஒருமுறை மட்டுமே மருத்துவர் சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த நகர்ப்புற சுகாதார மையத்தை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, 24 மணி நேரம் செயல்படக் கூடியதாக மாற்ற வேண்டும். அதற்கு முன்பாக சுகாதார மையத்திற்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர ஊழியர்களை நியமிக்க வேண்டும். தற்போது சிகிச்சை அளிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். சுகா தார மைய வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக கழிப்பறை அமைக்க வேண்டும் என வலியறுத்தி சிபிஎம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணை யர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் செவ்வா யன்று (மே 21) ரிப்பன் மாளிகையில் சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் க.பீம்ராவ், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி, கிளைச் செய லாளர்கள் முருகன், சுப்பிரமணி ஆகி யோர் மனு அளித்து பேசினர். இதனையடுத்து நடேசன் நகர் சுகாதார மையத்தின் நிலை குறித்தும், அதை மேம்படுத்த உள்ள சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு மாநகராட்சி சுகாதார அலுவலருக்கு, ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.