districts

img

சாலையை சீரமைக்க கோரி கடலூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கடலூர், டிச.13- கடலூர் முதுநகர் சுத்துக்குளம் ரயில்வே கேட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு செல்லும் சாலை குண்டும் குழியு மாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி வாக னங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்த சாலை மட்டத்தை உயர்த்தி, தரமான சிமெண்ட் சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் சுத்துக்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பு ராயன், ஜே.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மூத்த தலைவர் தட்சிணாமூர்த்தி,  ஒன்றிய செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சி உதவி பொறியாளர் கலை வாணி மற்றும் முதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார், உதவி ஆய்வாளர் எழில் தாசன் ஆகியோர் பேச்சு நடத்தினர்.  அப்போது, சாலையை சீரமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலை செய்வதற்கான உத்தரவு வழங்கப் பட்டுள்ளது. விரைந்து பணிகள் துவங்கும் என்றனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.