districts

img

அடையாளமற்ற இருளர் மக்களுக்கு அத்தாட்சிகள் வழங்க சிபிஎம் கோரிக்கை

கிருஷ்ணகிரி,பிப்.14- பர்கூர் உட்பட கிருஷ்ணகிரி கிட்டம் பட்டி அருகே சூலமலை பகுதியில் தென்னந்   தோப்புகளில் 11 இருளர் குடும்பத்தினர் அர சின் எந்த அத்தாட்சியும் இன்றி இருளர் மக்கள் என்ற ஒற்றை அடை யாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முந்தைய தலைமுறை முதல் தென்னந்தோப்புகளில் ஆங்காங்கே காவல் காத்து குடிசைகளிலும் பாலிதீன் டெண்டு களிலும் எந்த பாதுகாப்பு வசதியும் இல்லா மல் வாழ்ந்து வருகின்றனர்.  இந்நிலையில் பர்கூர் வட்ட மார்க்சிஸ்ட் கட்சி செய லாளர் ஸ்ரீனிவாசன், கிருஷ்ணகிரி வட்ட செயலாளர் ராஜா, வட்டக்குழு உறுப்பினர் எல்லப்பா கொத்தடிமைகள் போல் உள்ள இந்த இருளர் மக்களின் அனைத்து குடும்பங்களையும் சந்தித்து விசாரித்தனர்.   மாவட்ட நிர்வாகம்,அரசு அலுவலர்கள் தலையிட்டு இந்த மக்களுக்கு அடிப்படை தேவைகளை, உதவிகளை செய்திட வேண்டும் ஆதார் அட்டை,சாதி சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைந்தபட்ச பாதுகாப்பான வாழ்க்கைக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும், பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டிய வயது வரம்பிற்குள் உள்ள 20 க்கும் மேற்பட்டவர்களை பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என வட்டச் செய லாளர்கள் சீனிவாசன், ராஜா,  மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் கோரிக்கை விடுத்துள்ளனர்.