திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிறுவேடல் டி.ஆர்.பாலுவை ஆதரித்து திருப்பெரும்புதூர் வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காந்தூர், போந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கே.நேரு, என்.சாரங்கன்,சிபிஐஎம் திருப்பெரும்புதூர் வட்டச் செயலாளர் ப.வடிவேலன், வட்டக்குழு உறுப்பினர்கள் கே.முகமதுகனி, பி.செல்வராஜ், எஸ்.ஆனந்தன், ஆர்.சுகுந்தன், கே.செல்லப்பன், ஜெனிட்டன், அன்பழகன், ரமேஷ் திமுக கிளை செயலாளர் பிச்சுமணி ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர்.