districts

கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது: திருவண்ணாமலை ஆட்சியர்

திருவண்ணாமலை, ஜன.5-  திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பேசினார்.  திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்து பேசுகையில், “திரு வண்ணாமலை மாவட்டத்தில் 91 விழுக்காட்டினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஆனாலும் கடந்த ஓரிரு நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது” என்றார். முதலில் கொரோனா தொற்று பாதித்த நபர்களிடம் இருந்து ஓரிரு நபர்களுக்கு மட்டுமே கொரோனா பரவி வந்தது. இப்போது 2 பேரிடம் இருந்து 20 பேருக்கும், 20 நபரிடம் இருந்து 200 பேருக்கும், 200 பேரிடம் இருந்து 2 ஆயி ரம் பேருக்கும் என கரோனா பரவல் எண்ணிக்கே அதிகரித்து வருகிறது என்றும் ஆட்சியர் கூறினார். நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மக்க ளவை உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம், திரு வண்ணாமலை கோட்டாட்சியர் வீ.வெற்றி வேல், திருவண்ணாமலை முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நேரு, பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதி லட்சுமி, திருவண்ணாமலை நகர திமுக செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.