பழைய ஓய்வூதிய திட்டம், ஒன்றிய அரசு காலிப் பணியிடங்களை நிரப்புதல் குறித்து எந்த அறிவிப்பும் ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் இல்லாததைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வடசென்னை மாவட்டம் சார்பில் தங்கசாலையில் புதனன்று (ஜூலை 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பு தலைவர் சா.டேனியல் ஜெய்சிங், வடசென்னை மாவட்டத் தலைவர் வி.விஜயகுமார், மாவட்டச் செயலாளர் எம்.அந்தோணிசாமி, மாவட்ட இணை செயலாளர் மகேந்திரன், துணைத் தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.