நெல்லையில் சிபிஎம் அலுவலகம் சூறையாடிய குண்டர்கள் மீது நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட குழு சார்பில் ஞாயிறன்று (ஜூன் 16) மாவட்ட குழு உறுப்பினர் பி. ரகுபதி தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, வேட்டைக்காரன் சங்க மாநில பொதுச்செயலாளர் கங்காதரன், மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஏ.வி. சண்முகம், ஆர். தமிழரசன், வேட்டைக்காரர் சங்கம் மாநில தலைவர் சேட்டு, மாவட்ட குழு, வட்டார குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.