புதுச்சேரி,ஜன.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச முன்னாள் செயலாளர் எஸ்.வீரபத்திரன் நினைவுதினக் கூட்டம் முதலியார்பேட்டை சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிபிஎம் நகச் செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தரராமன், பிரதேசசெயலாளர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன்,கொளஞ்சியப்பன், கலிய மூர்த்தி,நகரக்குழு உறுப்பினர்கள்,கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக முதலியார்பேட்டை பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்டோர் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து கொண்டனர். பாகூர் இதேப்போல் பாகூர் சிபிஎம் கொம்யூன் குழு அலுவலகத்தில் நடை பெற்ற நினைவுதினக் கூட்டத்தில் எஸ். வீரபத்திரன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கொம்யூன் செயலாளர் சரவணன்,செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பிரதேசக்குழு உறுப்பினர் கலியன், கிளைச் செயலாளர்கள், மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.