தோழர் கே.எம்.ஹரிபட் 24ஆம் ஆண்டு நினைவு நினைவஞ்சலி கூட்டம் சிபிஎம் வட்டச் செயலாளர் சேது மாதவன் தலைமையில் ஓசூர் சிஐடியு அலுவலகத்தில் ஞாயிறன்று (ஜன. 22) நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் நாராயணமூர்த்தி, ரேகா, ஒன்றியக் குழு உறுப்பினர் அனுமந்தராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், ரத்னா, பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.