செங்கல்பட்டு,செப்.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்க ளில் ஒருவரான தோழர் ஜி.ராமானுஜம் உடல் நலக்குறைவால் கால மானார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கூவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தோழர் ஜி.ராமானுஜம் ( வயது 78). 1978 ஆம் ஆண்டில் சிபிஎம்-ல் தன்னை இணைத்துக் கொண்ட ஜி.ராமானுஜம் செய்யூர் வட்டம் கூவத்தூர், கல்பாக்கம் மற்றும் அப்பகுதி கிராமங்களில் சிபிஎம் மற்றும் விவசாய சங்கத்தை கட்டுவதில் திறம்பட பணியாற்றியவர். ஒன்றுபட்ட செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டக்குழு உறுப்பினராகவும், காஞ்சிபுரம் திருவள்ளூர் என இரண்டு மாவட்டக்குழுகள் பிரிக்கப்பட்டபோது காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினராக வும் செய்யூர் வட்ட செய லாளராகவும் செய்யூர் வட்டம் இரண்டாக பிரிக்கப்பட்ட போது லத்தூர் ஒன்றியத்தின் செயலராகவும் இயக்கப் பணியாற்றியவர். தான் மட்டுமில்லாமல் தன் குடும்பத்தையும் கட்சிக்குள் பயணிக்க வைப்பதில் சிறப்பாக செயல்பட்டவர் இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் சனிக்கிழமையன்று (செப்.21) இயற்கை எய்தி னார். செய்யூர் வட்டம், கூவத்தூர் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவ ரது உடலுக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.சு. பாரதி அண்ணா, மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இ. சங்கர், செய்யூர் வட்ட செயலாளர் எஸ்.ரவி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், வட்ட குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்வுகள் ஞாயிறன்று (செப். 22) மதியம் 2 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது.