மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அர்ப்பணிப்பு மிக்க ஊழியராக சென்னை மாவட்ட கட்சி வளர்ச்சிக்காக சுமார் 40 ஆண்டுகள் செயலாற்றியவர் கேரள சமாஜம் கட்சிக் கிளை முன்னாள் செயலாளர் பி. குஞ்சாப்பா. தற்போது கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் வசித்து வருகிறார். பி.கஞ்சாப்பாவின் பணியை பாராட்டி அவரது இணையர் சி.கே.கமலா, மகள் கே.சுதா ஆகியோர் முன்னிலையில் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி செல்வா சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். இந்நிகழ்வில் மெட்ராஸ் கேரள சமாஜம் செயலாளர் டி.அனந்தன், கும்பளங்காடு உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.