புதுச்சேரி,அக்.14- புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு கலை கல்லூரியின் கட்டிடத் தில் உள்ள கழிவறையின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து மாணவி ஒருவர் காய மடைந்தார்.இச்சம்பவத்தை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உயர் சிகிச்சை அளித்து உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டியும், கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆராய வலியுறுத்தியும் மாணவர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கல்லூரி வளாகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் பிரவீன் குமார், மாநிலக்குழு உறுப்பினர் அரசன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றனர். அதிகாரி உறுதி காயமடைந்த கல்லூரி மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிட ப்பட்டது.