districts

அனுமதியற்ற விளம்பர பேனர் கூடாது ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்,ஜூலை 3-

    அனுமதி பெறாமல் பதாகைகள், தட்டிகள், பேனர்கள் வைப்போர் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

   காஞ்சிபுரம் மாவட்டத் தில், கடந்த 2 ஆம் தேதி, ஆட்சியர் தலைமையில் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில்,  அனுமதியற்ற விளம்பர பதாகைகள் அகற்றுவது தொடர்பாக, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கிராம ஊராட்சி களில், விளம்பர பதாகைகள் நிறுவ, ஆட்சியரிடம் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் ஊராட்சிகளில் விளம்பர பதாகைகள் வைத்தால், ஊராட்சி நிர்வாகத்தால் உடனடியாக அகற்றப்படும். விதிமுறைகளை மீறி வைப்போருக்கு, அபராதம் அல்லது 2 ஆண்டு வரை  சிறை தண்டனை விதிக்கப் படும். இவ்வாறு அவர் எச்சரித்தார்.

;