districts

img

பள்ளி வாகனங்கள் தகுதி: ராணிப்பேட்டை ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டை, மே. 14 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களை செவ்வாயன்று (மே. 14) ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி வருடாந்திர ஆய்வு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி வாகனங்களில் ஏற்படும் எதிர்பாராத தீ விபத்துகள் குறித்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பித்ததை மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி பார்வையிட்டார். இதில் வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மோட்டார் ஆய்வாளர்கள் சிவக்குமார், செங்குட்டு வேல், தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் மோகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

;