குடியாத்தம், ஜூன் 15-
தமிழ்நாடு அரசின் செறிகூட்டிய புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை-2019-ன் படி குறைந்த பட்சம் 3 தொழில் கூடங்கு ளுடன் குறைந்த பட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் பொருட்டு திருத்திய அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உடனடியாக செயலாக்கம் செய்ய ஏதுவாக முதலீட்டார்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்தாலோசனை கூட்டங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து வேலூர் ஆட்சி யர் குமாரவேல் பாண்டியன், குடியாத்தம் அடுத்த ராமாலை ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க ஏதுவான இடம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ உடனிருந்தார்.