ஆரணி, மார்ச் 15- ஆரணியில் பெற்றோரை இழந்து தவித்து வரும் 3 குழந்தைகளுக்கு படிப்பு செலவு, வீடு கட்ட ஆணை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை ஆட்சியர் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டெய்லர் லோகநாதன். இவரது மனைவி வேண்டா. இவர்களது மகள் கார்த்திகா (15), மகன் சிரஞ்சீவி (14), மகள் நிறைமதி (10) என 3 குழைந்தைகள் உள்ளனர். கார்த்திகா 10ஆம் வகுப்பும், சிரஞ்சீவி 9ஆம் வகுப்பும், நிறைமதி 6ஆம் வகுப்பும் அரசு பள்ளி யில் படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு லோக நாதன் இறந்துவிட்டார். 3 குழந்தை களை வேண்டா 100 நாள் வேலைக்கு சென்று காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேண்டா புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனால் கார்த்திகா, சிரஞ்சீவி, நிறைமதி ஆகிய 3 குழந்தைகளும் தங்களின் தட்டை வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். மதியம் நேரத்தில் மட்டும் அரசு பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு, காலை, இரவு நேரங்களில் உணவு கிடைக்காமல் 3 குழந்தைகளும் தவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த ஆட்சியர் முருகேஷ் ஆவணியாபுரம் கிராமத்திற்கு சென்று பெற்றோரை இழந்த குழந்தைகளை சந்தித்து, 3 குழந்தைகளின் படிப்பு செலவு அனைத்தும் மாவட்ட நிர்வாகமே ஏற்று கொள்ளபடும் என்று தெரி வித்தார். மேலும் குடும்பத்தில் இறந்தவர்களின் நிவாரணமாக 22 ஆயிரம் ரூபாய் காசோலை மற்றும் மாதம் தலா 2 ஆயிரம் என 3 குழந்தைகளுக்கும் வழங்க ஆணை வழங்கினார். மேலும் வீட்டு மனை பட்டா, பூர்வீக சொத்தின் பெயர் மாற்றம், வீடு கட்டும் பணி ஆணை, மாவட்ட கல்வித் துறை சார்பில் 5 ஆயிரம் ரூபாய், 3 அரிசி சிப்பம், ஆடைகள் ஆகியவற்றையும் 3 குழந்தைகளிடம் ஆட்சியர் வழங்கி ஆறுதல் கூறினார்.