districts

img

கோஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.13 கோடி லாபத்தில் இயங்கி வருகிறது கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பேட்டி

ராணிப்பேட்டை, அக். 24 –  ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.72 கோடி மதிப்பீட்டி லான முடிவுற்ற 10 வளர்ச்சி திட்டப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி துவக்கிவைத்தார்.  மாவட்ட ஆட்சியர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார்.  பிறகு செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர், கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ.9.5 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்தது. திமுக ஆட்சி வந்த முதல் ஆண்டிலேயே ரூ.9.5 கோடி லாபத்தை ஈட்டியது. தற்பொழுது வரை ரூ.13 கோடி லாபத்தில் இயங்கி வருகிறது என்றார். கோ ஆப் டெக்ஸ் கடைகள் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் உள்ளன. வெளி மாநிலங்களில் 44 கடைகள் உள்ளன. இவைகளில் 48 கடைகள் நவீனமயமாக்கப்பட்டு விற்பனை இரட்டிப்பு அடைந்துள்ளது. ரூ.171 கோடி விற்பனையில் இருந்து வந்தது தற்போது ரூ.200 கோடிகளுக்கு மேல் விற்பனையாகி வருகிறது என்றும் ரூ. 400 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் சிறந்த முறை யில் பொதுமக்களுக்கு சேவை செய்து வரு கிறது என்றும் தெரிவித்தார். கடந்தாண்டு தீபாவளிக்கு ரூ.73 கோடி விற்பனை நடந்துள்ளது. இந்த ஆண்டு ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நவீன காலத்துக்கேற்ப மக்களின் தேவை அறிந்து கோ ஆப் டெக்ஸ் நிறு வனம் துணிகளை விற்பனை செய்து வரு கிறது. புகார்கள் உள்நோக்கத்துடன் தெரி விக்கப்படுகிறது. இவைகள் உண்மைக்கு மாறானவை என்றும் கூறினார்.