இந்திய கடற்படையினர் ஞாயிறன்று தமிழகத்தில் கடற்படை தளங்களுக்கு அருகே உள்ள கடற்கரை, ஏரி, குளங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். ஆவடியில் உள்ள கொள்ளுமேடு ஏரியில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள், ரேப்பர்கள், தெர்மாகோல், கண்ணாடித் துண்டுகள் போன்ற மக்காத கழிவுப் பொருட்களை அகற்றினர்.