மதுராந்தகம் அடுத்த வையாவூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிஎஸ்எல் தொழிற்சாலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்த நிலையில் திடீரென கதவடைப்பு செய்த தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்டு சாலையில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.சேஷாத்ரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.செல்வராஜ், மாவட்ட உதவித் தலைவர் மாசிலாமணி, சிபிஎம் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. வாசுதேவன் உள்ளிட்ட பலர் பேசினர்