போக்குவரத்து தொழிலாளர்களின் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக துவக்க கோரியும், வரவுக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாசத் தொகையை அரசு வழங்க வலியுறுத்தியும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பண பலன்களை வழங்கக் கோரியும் போக்குவரத்து சிஐடியு சங்கத்தின் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ். மணிகண்டன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் பி.கண்ணன், துணை பொதுச் செயலாளர் எஸ்.ராமமூர்த்தி, பொருளாளர் எம். அரும்பாலன், சிறப்பு தலைவர் ஜி.பாஸ்கரன், மண்டல பொதுச் செயலாளர் பி.முருகன், துணைத் தலைவர்கள் எம். முத்துக்குமரன், ஏ.எஸ். நடராஜன், ஏ.தேவராஜூலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.