வேலூர்,பிப்.1- வேலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய கணித அறிவியல் நிறுவனம் சார்பில் 32வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் அமுதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விசுவநாதன், கல்லூரி முதல்வர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார். அறிவியல் மாநாட்டில் முதுநிலை மாணவர்கள் 52 குழுக்களாகவும், இளநிலை மாணவர்கள் 44 குழுக்களாகவும் மொத்தம் 96 குழுக்களில் 20 பள்ளிகளை சேர்ந்த 192 மாணவ மாணவிகள் 35 வழி காட்டி ஆசிரியர்கள் பங்கேற்றனர். மண்டல அளவிலான போட்டிக்கு 11 ஆய்வறிக்கைகள் பரிந்துரை செய்யப்பட்டு பிப். 1 அன்று வடக்கு மண்டல அளவில் நடை பெறும் மாநாட்டில் ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.