சென்னை தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபுசங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரத்தை வழங்கி சிறப்பித்தார்கள். உடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உள்ளிட்டோர் இருந்தனர்.