ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சென்னை வடக்கு கிளை சார்பில் மணலி 400 துணை மின் நிலையம் அருகே முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் கே.வெங்கடய்யா தலைமையில் வியாழனன்று (டிச. 1) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கவுரவத் தலைவர் சத்தியமூர்த்தி, பொருளாளர் வெங்கடேசன், மதன் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மின் ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை தொடங்காமல் வாரியம் மூன்று ஆண்டுகளாக காலம் கடத்தி வருகிறது. இதனை கண்டித்து வியாழனன்று (டிச.1) தமிழகம் முழுவதும் பிரிவு அலுவலங்களில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை தெற்கு திட்டம், போரூர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.