districts

img

மல்யுத்த வீரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வேண்டும், மல்யுத்த வீரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாவட்டத் தலைவர் ஆண்டாள், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பெ.திலீபன், செயலாளர் எஸ்.பார்த்திபன், செயற்குழு உறுப்பினர் எல்.நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.