districts

img

செங்கல்பட்டு- காஞ்சிபுரம் ரயில் சேவை ரத்து: பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம், பிப்.26- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில்  உள்ள ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு காரணத்தால் தொடர்ந்து மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தெற்கு ரயில்வே நிர்வாகம் முற்றிலும் ரயில் போக்குவரத்தை ரத்து செய்தது. இதில் அம்மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  சென்னை கடற்கரை செங்கல்பட்டு- காஞ்சிபுரம் இடையேயான ரயில்களை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்து வருகிறது. காஞ்சிபுரம் சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி திருமால்பூர் சென்னை கடற்கரை இடையே காலை வேளையில் இயக்கப்படும் ரயில் சேவை கடந்த ஞாயிறன்று ரத்து செய்யப்பட்டது.  தெற்கு ரயில்வே நிர்வாகம் பயணிகள் வசதிக்காக செங்கல்பட்டு- தாம்பரம் இடையே காலை 10.55, 11.50, 11.30,  12 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது இவ்வாறு தாம்பரம் செங்கல்பட்டு இடையே மதியம் 12.05, 1. 45, 1. 55 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப் படும் என அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மக்களின் வசதியை  தெற்கு ரயில்வே நிர்வாகம் சற்று கவனித்திருந்தால் காஞ்சிபுரம்- சென்னை  கடற்கரை இடையே காலை 9.30 மணிக்கு, திரு மால்பூர் சென்னை கடற்கரை இடையே 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயிலை, தாம்பரம் வரை இயக்கி இருந்தால் செங்கல்பட்டு- தாம்பரம் இடையே அறி விக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு ரயிலை இந்த இரு ரயில்கள் மூலம் தவிர்த்திருக்கலாம். மேலும் மதியம் ஒரு மணிக்கு சென்னை கடற்கரை அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட்ட ரயில் சேவையை தாம்பரத்திலிருந்து மதியம் அறிவித்துள்ள  தாம்பரம்- செங்கல்பட்டு என்ற  ஒரு சிறப்பு ரயிலை தவிர்த்திருக்கலாம்.  காஞ்சிபுரம் மக்கள் நீண்ட காலமாக மதியம் 2 மணி ரயிலை இயக்க வலியுறுத்தி வந்த போதிலும் தெற்கு ரயில்வே நிர்வாகம் செவிசாய்க்க மறுக்கிறது. தொடர்ந்து காஞ்சிபுரம் பயணிகளை வஞ்சிக்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மாவட்டக்குழு கண்டிப்பதோடு, எதிர்காலத்தில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வண்ணம்  சிறப்பு ரயில் கால அட்டவணையை வரையறுக்க வேண்டுமென காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் தென்னக ரயில்வே துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.