ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் நகரம் முழுவதும் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன், மாவட்டக் குழு உறுப்பினர் பக்கீரான், மாநகர் குழு உறுப்பினர்கள் கருணாகரன், பாபு, நாராயணன், செந்தில், திருமுருகன், பழனி, தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.