காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் பிரச்சாரம் நடைபெற்றது. திமுக பேரூர் செயலாளர் மற்றும் பேரூராட்சி தலைவர் து.யுவராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், திருக்கழுக்குன்றம் பகுதி செயலாளர் எம்.குமார், நகர செயலாளர் பி.இராமமூர்த்தி, நிர்வாகிகள் எஸ்.அழகேசன், எஸ்.சுந்தரம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.