districts

img

பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் துவக்கம்

ஓசூர் வட்டம் பாகலூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்தின் கீழ் 1 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு,ஒசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.பெரியசாமி கலந்து கொண்டனர்.