districts

காலை உணவு திட்டம் ஆட்சியர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி,ஜூலை 4-

    முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், நடை பெற்றது.  

    இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார் அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 15 அரசு தொடக்கப் பள்ளி களில் முதலமைச்ச ரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி செயல்  படுத்தப்பட்டு வருகிறது.  

   மேலும் 8 வட்டாரங்களில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சிகளுக் குட்பட்ட 638 அரசு தொடக்கப் பள்ளியில் இத்திட்டம் செயல் படுத்தப் பட உள்ளது. காலை உணவு சமைத்து வழங்கும் பணி களில் ஈடுபட்டுள்ள சுய உதவிக்குழுவினருக்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறினார்.

;