districts

சென்னை முக்கிய செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில்  பைக் ரேஸ்: 50 பேருக்கு எச்சரிகை

சென்னை,மே 19- சென்னையில் மெரினா மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் எச்சரிக்கையை மீறி வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பைக் ரேஸ் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை யில் விடுமுறை தினமான  ஞாயிறன்று (மே 19) பைக் ரேஸ் நடைபெற்று வரு வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கரணை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பாதுகாப்பு உடை அணிந்து இருந்த அவர்களை உதவி ஆணையர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.

 நண்பனின் தலையை  சிதைத்து கொலை

சென்னை, மே 19- கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரின் எழில் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் பாரிமுனையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மீது ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் ஏற்கெனவே இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தன்னுடன் கூலி வேலை செய்யும் ராயபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரை, சனிக்கிழமையன்று இரவு வீட்டிற்கு மது குடிக்க அழைத்துள்ளார். இரவு முழுவதும் இருவரும் மது அருந்தி வீட்டின் மொட்டை மாடியில் படுத்து உறங்கியுள்ளனர். பின்னர் சரவணன், ரஞ்சித் குமாரின் தங்கையை தவறாகப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ரஞ்சித் குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரவணனை சரமாரியாக வெட்டி, அவரது தலையை சிதைத்து கொலை செய்துள்ளார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார், ரஞ்சித் குமாரை கைது செய்துள்ளனர்.

 

;