districts

img

விழிப்புணர்வு நடைபயணம்

சென்னை, ஜன. 12- வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் பல்நோக்கு மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 3 நாள் ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் முக்கிய நோக்கம் வேளச்சேரி மற்றும் அதனைச் சுற்றி உள்ள மக்க ளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதாகும். பாதுகாப்பான சூழலை வளர்ப்பதற்கும், விபத்துகளைத் தடுப்பதற்கும் பிரசாந்த் மருத்துவமனையால் மேற்கொள்ளப்பட்ட இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையிலிருந்து 5 கிமீ வாக்கத்தான் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை பிரசாந்த் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா மற்றும் இம்மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பாஸ்கரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.