districts

img

வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய மக்களுக்கு விருது

சென்னை,பிப்.9-  நிஜ வாழ்க்கையில் சூப்பர் ஹீரோக்களாக விளங்கிய வர்களுக்கு ஆண்டுதோறும் ‘அலர்ட் பியிங்’  (ALERT Being)   விருது வழங்கப்படுகிறது.  அலர்ட் என்ற தன்னார்வ லாப நோக்கற்ற அமைப்பானது  கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தின் போது குழந்தையைப் பெற்றெடுக்க உதவிய தூத்துக்குடியைச் சேர்ந்த செவிலியர் ஜெயலட்சுமிக்கு, கடமையைத் தாண்டி பணியாற்றியதற்காக விருது வழங்கியது.  அலர்ட் பியிங் ஐகான் விருது உத்தரகாண்ட் சுரங்கத்தில்  சிக்கிய 41 பேரை காப்பாற்றிய எலி வலை வீரர்களுக்கும், தூத்துக்குடி வெள்ளத்தின் போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவை செய்ததற்காக புதுக்குடி மேலூர் மக்களுக்கும் வழங்கப்பட்டது.  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடையாறு புற்று நோய் மைய தலைவர் சேஷசாயி,  சென்னை இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர். மோகன் காமேஸ்வரன் அலர்ட் தலைவர் மைக் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.