districts

img

செங்குன்றத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று செங்குன்றத்தில் (செப்.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சா.வேலு தலைமை தாங்கினார்.இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.துளசிநாராயணன், ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சந்திர சேகரன், தையல் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.நடேசன், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சந்திரன்,  எஸ்.பரமசிவம், வி.பாஸ்கர், மீஞ்சூர் சாய்ரா ஆகியோர் பேசினர். திருவள்ளூர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.கரிமுல்லா தலைமை தாங்கினார்.இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் சங்கர்தாஸ், மாயக்கண்ணன், சீனிவாசன் உட்பட பலர் பேசினர்.