districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரவு பாடசாலையில் பி.ஆர். அம்பேத்கரின் உருவச்சிலை திறப்பு

சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி எழும்பூர் பகுதி, புல்லாபுரத்தில்  உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரவு பாடசாலையில் அவரது உருவச்சிலை திறக்கப்பட்டது. சங்கத்தின் கிளைச் செயலாளர் கே.டி. சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா திறந்து வைத்தார். சங்கத்தின் எழும்பூர் பகுதி துணைத்தலைவர் ஹேமந்த், நிர்வாகிகள் முரளி, உமாபதி,  சிபிஎம் பகுதிச் செயலாளர் கே.முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன், வெ.ஆறுமுகம்,  சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின பொதுச்செயலாளர் பி.வி சீனிவாசுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.