districts

சென்னை விமானநிலையத்தில் இன்று புதிய வளாகத்தை பிரதமர் திறக்கிறார்

சென்னை,ஏப்.7- சென்னை வரும் பிரதமர்  மோடி பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்கிறார். சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் நடக்கும் ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மயிலாப்பூர்  ராமகிருஷ்ணா மடம் செல்லும் சாலை குறுகலாக உள்ளது. நிகழ்ச்சி நடை பெறும் இடமும் சிறியதாக உள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்துக்கு பிரதமர் மோடி செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ராம கிருஷ்ணா மடத்தின் 125-வது  ஆண்டு விழா நிகழ்ச்சி விவே கானந்தர் இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.  இதையடுத்து பிரதமர் மோடி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை - கோவை வந்தேபாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.  பின்னர் அங்கிருந்து சாலை மார்கமாக விவேகானந்தர் இல்லத்துக்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சென்னை விமான நிலையத்தில் பழைய விமான நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்து முனை யத்தை அவர் திறந்து வைக்கிறார்.